by Staff Writer 24-04-2020 | 8:10 PM
Colombo (News 1st) தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேலியகொடை மீன் சந்தை, மொத்த விற்பனை செயற்பாடுகளுக்காக நாளை (25) திறக்கப்படவுள்ளது.
மீன் சந்தையில் சேவையாற்றுபவர்கள் PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இதில் எவரும் தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்படவில்லை.
இதனையடுத்து, பேலியகொடை மீன் சந்தையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.