பேலியகொடை மீன் சந்தை திறக்கப்படவுள்ளது

பேலியகொடை மீன் சந்தை நாளை திறக்கப்படவுள்ளது

by Staff Writer 24-04-2020 | 8:10 PM
Colombo (News 1st) தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேலியகொடை மீன் சந்தை, மொத்த விற்பனை செயற்பாடுகளுக்காக நாளை ​(25) திறக்கப்படவுள்ளது. மீன் சந்தையில் சேவையாற்றுபவர்கள் PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இதில் எவரும் தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்படவில்லை. இதனையடுத்து, பேலியகொடை மீன் சந்தையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.