பேலியகொடை மீன் சந்தையில் எவருக்கும் தொற்று இல்லை

பேலியகொடை மீன் சந்தையில் எவருக்கும் COVID -19 தொற்று இல்லை

by Staff Writer 24-04-2020 | 2:48 PM
Colombo (News 1st) பேலியகொடை மீன் சந்தையில் எவரும் COVID -19 தொற்றுக்கு இலக்காகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். மீன் சந்தையில் 529 பேருக்கு தொற்று தொடர்பிலான PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார்.