புத்தளம் சாஹிரா கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 82 பேர் வீடு திரும்பினர்

by Staff Writer 24-04-2020 | 6:35 PM
Colombo (News 1st) புத்தளம் சாஹிரா கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 82 பேர் இன்று வீடுகளுக்கு திரும்பினர். புத்தளத்தை சேர்ந்த 70 பேரும் மருதானையை சேர்ந்த 8 பேரும் சிலாபத்தை சேர்ந்த நால்வரும் இதில் அடங்குகின்றனர். புத்தளம் - கடுமையான்குளத்தை சேர்ந்த ஒருவர் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவருடன் தொடர்புகளை பேணியவர்களே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தனிமைப்படுத்தல் முகாமில் கடந்த 26 நாட்களாக தனிமைப்பட்டிருந்த குறித்த 82 பேருக்கு புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.