by Bella Dalima 24-04-2020 | 2:40 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.
வெலிசறை கடற்படை முகாமில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த இராணுவ முகாமில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், விடுமுறையில் சென்றுள்ள கடற்படை வீரர்கள் ஐவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு - 12, பண்டாரநாயக்க மாவத்தை பகுதியை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மருதானை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டிருப்பதாக இன்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, இன்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 47 பேர் தொற்றுக்குள்ளானமை தெரிய வந்துள்ளது.
நேற்றைய தினத்தில் 38 பேர் அடையாளங்காணப்பட்டிருந்தனர்.
நாட்டில் தொற்று ஏற்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 109 பதிவாகியுள்ளது.