அம்பாறையின் 4 பகுதிகளுக்குள் பிரவேசிக்கத் தடை

அம்பாறை மாவட்டத்தின் 4 பகுதிகளுக்குள் பிரவேசிக்கத் தடை

by Staff Writer 24-04-2020 | 3:00 PM
Colombo (News 1st) வெலிசறை கடற்படை முகாம் உறுப்பினர்கள் நடமாடிய பகுதிகள் குறித்து பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரிவினர் கவனம் செலுத்தியுள்ளனர். இதனடிப்படையில், அம்பாறை மாவட்டத்தின் 4 பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வௌியேறுவதற்கும் பொலிஸாரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உஹன, தமன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் ரஜவெவ, மடவலலந்த , பஹலலந்த மற்றும் நவகிரியாவ ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்கு அத்தியவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளிலிருந்து வௌியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 12 கிராமங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. லங்காபுர , வீரபுர , பூமாடிய, புலஸ்திகம, அபயபுர , சோமபுர , பௌத்தார்தகம , சங்கபோதிகம, அல்ஹிலால் புர, ரிஃபாய்புர , தம்பால, பட்டுநுகம ஆகிய கிராமங்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பூமாடிய கிராமத்தைச் சேர்ந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் மட்டக்களப்பிலுள்ள இரண்டு தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.