வன ஜீவராசிகள் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச்சூடு

மிருக வேட்டைக்காரர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 25 வயதான வன ஜீவராசிகள் உத்தியோகத்தர் பலி

by Bella Dalima 23-04-2020 | 2:41 PM
Colombo (News 1st) கல்ஓயா தேசிய சாரணாலயத்தில் மிருக வேட்டையில் ஈடுபட்டவர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வன ஜீவராசிகள் உத்தியோகத்தர் ஒருவர் உயிழந்துள்ளார். 25 வயதான உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பில் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்த துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.