by Staff Writer 23-04-2020 | 8:47 PM
Colombo (News 1st) நாட்டில் எந்தவொரு பகுதியிலும் தலை பிறை தென்படாமையினால், புனித ரமழான் மாதம் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இன்று மாலை கூடிய பிறை குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் எம்.தஸ்லிம் மௌலவி குறிப்பிட்டார்.