உணவு ஒவ்வாமையால் மட்டக்களப்பில் சிறுவன் உயிரிழப்பு

உணவு ஒவ்வாமையால் மட்டக்களப்பில் சிறுவன் உயிரிழப்பு

by Bella Dalima 23-04-2020 | 3:08 PM
Colombo (News 1st) உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 11 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். உயிரிழந்த சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உணவு ஒவ்வாமை காரணமாக மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்லடி பகுதியை சேர்ந்த சிலரே அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.