பாகிஸ்தானிலிருந்து 106மாணவர்கள் அழைத்துவரப்பட்டனர்

பாகிஸ்தானிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கை மாணவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு

by Staff Writer 22-04-2020 | 3:36 PM
Colombo (News 1st) பாகிஸ்தானிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ள இலங்கை மாணவர்கள் 106 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் இலங்கையின் முப்படைகளை சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். இவர்கள் ஒரு மாத கால பயிற்சி நெறிக்காக பாகிஸ்தான் சென்றிருந்ததாகவும் அவர் கூறினார். கடற்படையை சேர்ந்தவர்கள் கடற்படையின் தனிமைப்படுத்தல் நிலையத்திலும், இராணுவம் மற்றும் விமானப்படையை சேர்ந்தவர்கள் அவர்களுக்குரிய தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். முப்படையினர் தவிர்ந்த ஏனைய 33 மாணவர்களையும் மட்டக்களப்பு - புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார். வௌிநாடுகளிலுள்ள விமான நிலையங்களில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் பலரை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.