by Staff Writer 22-04-2020 | 2:52 PM
Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் 132 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள் தொடக்கம் இதுவரையில் 35,321 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுவரையான காலப்பகுதியில் 9015 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.