அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகிறது

அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகிறது

by Staff Writer 22-04-2020 | 6:47 PM
Colombo (News 1st) அரசியலமைப்பு பேரவை நாளை (23) கூடவுள்ளது. முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.