மறு அறிவித்தல் வரை மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்

by Staff Writer 21-04-2020 | 8:55 PM
Colombo (News 1st) மறு அறிவித்தல் வரை மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு அரசாங்கம் இன்று காலை அறிவித்தது. இந்த அறிவித்தல் வௌியான சந்தர்ப்பத்திலும் மதுபான விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் கூறினர். ஹம்பாந்தோட்டை நகரில் அதிகளவிலானவர்கள் மதுபான விற்பனை நிலையம் முன்பாகக் கூடியிருந்தனர். பொலிஸாரும் குறித்த பகுதிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதேவேளை, 40 மதுபான போத்தல்களைக் கொள்வனவு செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். நாட்டின் மேலும் பல பகுதிகளிலும் மதுபானம் கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது.