கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு

by Staff Writer 21-04-2020 | 3:42 PM
Colombo (News 1st) இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரை 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று (20) மாத்திரம் 33 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இவர்களில் 24 பேர் கொழும்பு - 12 பண்டாரநாயக்க மாவத்தையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இலங்கையில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் பதிவான நாளாகவும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. 203 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் இருந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. இலங்கையில் 15 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பு , களுத்துறை, புத்தளம் , கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அதிக நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

ஏனைய செய்திகள்