அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் கலந்துரையாடல்

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இடையில் கலந்துரையாடல்

by Staff Writer 21-04-2020 | 4:00 PM
Colombo (News 1st) பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான இயலுமை மற்றும் அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. காலை 10.30 க்கு ஆரம்பமாகிய கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதன் பின்னர் ஒரு சில மாவட்டங்களில் மாத்திரம் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளுடன் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.