அமெரிக்காவினுள் நுழைய தற்காலிகத் தடை

அமெரிக்காவினுள் நுழைய தற்காலிகத் தடை

by Staff Writer 21-04-2020 | 4:55 PM
Colombo (News 1st) அமெரிக்காவினுள் நுழைவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்படுவதாக ஜனாதிபதி ட்ரம்ப், ட்விட்டர் பதிவினூடாக அறிவித்துள்ளார். 'கண்ணுக்குத் தெரியாத எதிரியின் தாக்குதல்' என அவரால் வர்ணிக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும், தொழில்துறைகளைப் பாதுகாப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் மேலும் 1,433 கொரோனா வைரஸ் மரணங்கள் சம்பவித்துள்ளன. இதனையடுத்து, அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,604 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 இலட்சத்தை அண்மித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.