ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு

by Staff Writer 20-04-2020 | 4:52 PM
Colombo (News 1st) பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிர் ரஞ்சன் ராமநாயக்க இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை விடுவிப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார். பிணை நிபந்தனை நிறைவேற்றப்படும் வரை தனிநபர் பிணையில் ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிக்கவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.