நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிக்கல்

புதுக்கடை நீதிமன்றில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்துவதில் சிக்கல் 

by Staff Writer 20-04-2020 | 4:03 PM
Colombo (News 1st) புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய சந்தேகநபர்களை, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதி அமைந்துள்ள பிரதேசத்தில், கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டவர்கள் அடையாளம் கணப்பட்டதை அடுத்து, ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதி அமைந்துள்ள பிரதேசத்திலுள்ள கொழும்பு மேல் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் செயற்பாடுகளும் இடம்பெறாது என நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டிய சந்தேகநபர்களை இந்த வாரத்தில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்