கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 304 ஆக அதிகரிப்பு  

by Staff Writer 20-04-2020 | 3:52 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது. இன்று முற்பகல் 24 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் கொழும்பு - 12, பண்டாரநாயக்க மாவத்தையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். பின்னர் இன்று பிற்பகல் 9 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அந்த வகையில், இலங்கையில் இனங்காணப்பட்ட தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் அதிகளவிலான கொரோனா நோயாளர்கள் பதிவான நாளாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு இலக்காகிய 122 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணித்தியாலங்களில் 7 நோயாளர்கள் குணமடைந்துள்ளனர். இதற்கமைய, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 98 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது.    

ஏனைய செய்திகள்