கனடாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: 16 பேர் பலி

கனடாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் உயிரிழப்பு

by Bella Dalima 20-04-2020 | 3:17 PM
Colombo (News 1st) கனடாவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவின் நோவா ஸ்கோட்டியா மாகாணத்தில் என்ஃபீல்ட் என்ற பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினுள் காவலர் சீருடையில் நுழைந்த நபர் அங்கிருந்த ஊழியர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய அந்நபரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தில் பெண் பொலிஸ் உட்பட 16 பேர் பலியாகினர். அத்துடன், பலர் காயமுற்றதாகக் கூறப்பட்டுள்ளது. விசாரணையின் போது, துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கெப்ரியல் எனும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.