அனைத்து பள்ளிவாசல்களிலும் நாளை விசேட பிரார்த்தனை 

அனைத்து பள்ளிவாசல்களிலும் நாளை விசேட பிரார்த்தனை நடத்துமாறு வேண்டுகோள்

by Staff Writer 20-04-2020 | 5:49 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து அனைத்து பள்ளிவாசல்களிலும் நாளை (21) விசேட பிரார்த்தனை நடத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை காலை 8 .40 முதல் 8.55 வரை பள்ளிவாசல்களில் இந்த பிரார்த்தனை நடைபெறவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட வடுக்கள் இலங்கையர்கள் அனைவரது உள்ளங்களிலும் இன்னும் ஆறாமல் இருப்பதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையிலும் நாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட வேண்டியும் நாளை காலை 8.40 தொடக்கம் 8.55 வரை விசேட பிரார்த்தனையை ஏற்பாடு செய்யுமாறு இலங்கை வக்பு சபையும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் வேண்டுகோள் விடுத்துள்ளன.