English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
20 Apr, 2020 | 8:24 pm
Colombo (News 1st) அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் இன்று ஜனாதிபதி செயலகத்திற்று வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலையில், மாவட்ட செயலாளர்களின் தலைமையில் மேற்கொள்ளக்கூடிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இன்று அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
விவசாய உற்பத்திகள், கொள்வனவு, களஞ்சியப்படுத்துதல் மற்றும் விநியோகத்திற்கான புதிய பொறிமுறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை வெற்றிகரமாக இல்லாதொழிப்பதற்கு மாவட்ட செயலாளர்களால் வழங்கப்படும் ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கடற்றொழில் கூட்டுத்தாபனம், விவசாய அறுவடைகளை கொள்வனவு செய்வதற்கான மரக்கறிகள் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்களின் அத்தியாவசியங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் அனேகமானோர் விவசாயிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் உற்பத்திகளை நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்வதால், அது மிக இலாபமான செயற்பாடாக அமைந்துள்ளதாக மாவட்ட செயலாளர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
14 Jan, 2021 | 02:33 PM
18 Dec, 2020 | 07:26 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS