மரத்தில் சிக்கித் தவித்த சிறுத்தை உயிரிழப்பு

மஸ்கெலியாவில் மரத்தில் சிக்கித் தவித்த சிறுத்தை உயிரிழப்பு 

by Bella Dalima 19-04-2020 | 4:17 PM
Colombo (News 1st) மஸ்கெலியா - காட்மோர் தோட்டத்தில் மரத்தில் சிக்கித் தவித்த சிறுத்தை உயிரிழந்துள்ளது. காட்டுப் பன்றிக்கு இடப்பட்ட கம்பியில் சிக்கியமையால், காயங்களுக்குள்ளான சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்தின் வன இலாகா அதிகாரி பிரபாத் கருணாதிலக்க குறிப்பிட்டார். சிறுத்தைக்கு அதிக குருதிப் பெருக்கு ஏற்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். 04 வயது மதிக்கத்தக்க இந்த சிறுதையின் உடல் தற்போது ரந்தெனிகல வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காட்மோர் - தம்பத்தனை தோட்டத்தில் மரமொன்றில் சிக்கியிருந்த சிறுத்தை நேற்று (18) பிற்பகல் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.