சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளாவது அதிகரிப்பு

சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரிப்பு

by Staff Writer 19-04-2020 | 3:15 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளில் 43 வீதமானவை சிறுவர் சித்திரவதைக்குள்ளான சம்பவங்களுடன் தொடர்புபட்டவை என ​தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் முதித விதான பத்திரன குறிப்பிட்டார். மார்ச் 16 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 377 முறைப்பாடுகள் அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். அவற்றில் 163 முறைப்பாடுகள் சிறுவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் கிடைத்துள்ளதாவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார். இதன் காரணமாக சிறுவர் பாதுகாப்பு தொடர்பான உளநல ஆலோசனை சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. UNICEF உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளூடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார். 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிப்பதனூடாக தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடயும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதான பத்திரன குறிப்பிட்டார்.