கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

by Staff Writer 19-04-2020 | 2:53 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேர் இன்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது. 158 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 07 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய செய்திகள்