சீன அரசாங்கத்தால் மருத்துவ உபகரணங்கள் நன்கொடை

சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை

by Staff Writer 18-04-2020 | 3:18 PM
Colombo (News 1st) PCR ஆய்விற்கு தேவையான 10,000 ஆய்வுக்கூட கட்டமைப்பு உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை சீன அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இவற்றில் முகக் கவசங்களும் அடங்குவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டார். கடந்த 28 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொரோனா ஒழிப்பிற்குத் தேவையான உதவிகளை சீன அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.