தடுப்பூசி வழங்கல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது

சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது

by Staff Writer 18-04-2020 | 3:29 PM
Colombo (News 1st) மே மாதம் நிறைவடைவதற்கு முன்னதாக சிறுவர்களுக்கான தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என குடும்பநல சுகாதார பணியகம் அறிவித்துள்ளது. எனினும், கர்ப்பிணி தாய்மார்களுக்கான மாதாந்த சிகிச்சைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சித்திரா மாலி டி சில்வா குறிப்பிட்டார். இதேவேளை, திரிபோசா பக்கெட்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவ வலி ஏற்படும் பட்சத்தில், தங்களின் பதிவேட்டை ஊரடங்கு கால அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் எனவும் குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சித்திரா மாலி டி சில்வா குறிப்பிட்டார்.