தபால் மூலம் பொருட்கள் விநியோகிக்க நடவடிக்கை

சதொச நிறுவனங்களில் இருந்து தபால் மூலம் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை

by Staff Writer 18-04-2020 | 3:09 PM
Colombo (News 1st) சதொச நிறுவனங்களில் இருந்து வீடுகளுக்கு பொருட்களை தபால் திணைக்களத்தின் ஊடாக விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான இணக்கப்பாடு நேற்று (17) எட்டப்பட்டதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டார். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக ஹோமாகம, ஹெவ்லோக் டவுன், கடவத்தை மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளன. ஆரம்பகட்ட செயற்றிட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில், ஏனைய மாவட்டங்களில் இதனை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டார்.