உற்பத்திகளை விற்க முடியாத நிலையில் விவசாயிகள்: யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு சுரேந்திரன் குருசுவாமி கடிதம்

உற்பத்திகளை விற்க முடியாத நிலையில் விவசாயிகள்: யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு சுரேந்திரன் குருசுவாமி கடிதம்

உற்பத்திகளை விற்க முடியாத நிலையில் விவசாயிகள்: யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு சுரேந்திரன் குருசுவாமி கடிதம்

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2020 | 7:50 pm

Colombo (News 1st) உள்ளூர் விவசாயிகள் உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் அவதியுறுவது தொடர்பில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகளிடமிருந்து அவற்றை கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையை உருவாக்கி செயற்படுத்துமாறு சுரேந்திரன் குருசுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த முறைமை சாத்தியப்படாதவிடத்து சந்தைப்படுத்தல் வசதியின்றி நஷ்டமடையும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வழிவகை செய்யுமாறு அவர் யாழ். அரசாங்க அதிபரிடம் கேட்டுள்ளார்.

இதனை நடைமுறைப்படுத்தத் தவறும் பட்சத்தில், விவசாயிகள் விரக்தியடைந்து விவசாயத்தைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்