வுஹானில் பலியானோரின் எண்ணிக்கை 50 வீதத்தால் உயர்வு

வுஹானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 17-04-2020 | 3:41 PM
Colombo (News 1st) Covid-19 தொற்று பரவலடைய ஆரம்பித்த சீனாவின் வுஹான் நகரில், தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,290 ஆக பதிவுசெய்யப்பட்டிருந்த, உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3,869 ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பில், வைத்தியசாலைகளுக்கு வௌியே உயிரிழந்தவர்கள் மற்றும் தாமதமாகக் கிடைத்த தரவுகள் தாக்கம் செலுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தக் காரணத்தினாலேயே குறித்த எண்ணிக்கையில் மாற்றம் செய்யவேண்டி ஏற்பட்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக பிபிசியின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். வுஹானின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பானது, சீனாவின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கைகளில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.