நாட்டின் அவசர கடன் கோரிக்கை குறித்து IMF மீளாய்வு

நாட்டின் கடன் கோரிக்கை குறித்து சர்வதேச நாணய நிதியம் மீளாய்வு

by Staff Writer 17-04-2020 | 2:47 PM
Colombo (News 1st) அவசர கடன் உதவி தொடர்பான இலங்கையினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து மீளாய்வு செய்யப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றினூடாக இந்த விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தௌிவுபடுத்தியுள்ளது. இலங்கைக்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்ட கடன் உதவிக்கு பதிலாக இந்த அவசர கடன் உதவியை வழங்குவதா? இல்லையா என்பது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.