ஜா-எலயில் மேலும் 40 பேர் தனிமைப்படுத்தல்

கொழும்பு, ஜா-எலயில் மேலும் 40 பேர் தனிமைப்படுத்தல்

by Fazlullah Mubarak 17-04-2020 | 11:39 AM

Colombo (News 1st) கொழும்பு மற்றும் ஜா எல - சுதுவெல்ல பகுதிகளை சேர்ந்த 40 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை சந்தித்தவர்களே தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, புனானை தனிமைப்படுத்தும் நிலையங்களில் கண்காணிக்கப்பட்ட 222 பேர் இன்று அங்கிருந்து அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.