சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய பெண் கைது

கொரோனா தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய பெண் ஒருவர் கைது

by Staff Writer 17-04-2020 | 4:25 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். திவுல்தெனிய பகுதியை சேர்ந்த 50 வயதான பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய தொடர்பில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் யாழ். கோப்பாய் பகுதியில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றும் இன்றும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.