IPL கிரிக்கெட் போட்டி கால வரையறையின்றி ஒத்திவைப்பு

IPL கிரிக்கெட் போட்டி மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

by Staff Writer 16-04-2020 | 5:52 PM
Colombo (News 1st) 13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து மார்ச் 29 ஆம் திகதி நடைபெறவிருந்த போட்டிகள் இம்மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. எனினும், இந்தியாவில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ளமையால், போட்டிகளை நடத்துவதில் சந்தேகம் எழுந்தன. இந்நிலையில், இவ் வருட போட்டிகளை இடைநிறுத்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கிரிக்கெட் போட்டியை விட தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.