by Staff Writer 16-04-2020 | 4:54 PM
Colombo (News 1st) நாட்டிலுள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் சேவையிலிருந்து விலகியுள்ளனர்.
தமக்கு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் எதுவும் இல்லாதமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நிலவும் சிக்கல்கள் குறித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சு, அதிகாரிகளுக்கு பல தடவைகள் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும், தமது பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை கவனம் செலுத்தப்படாத காரணத்தினால் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் சேவையிலிருந்து விலகுவதாக நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.