ரிஷாட் பதியுதீன் CID இல் ஆஜர்

ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்

by Staff Writer 16-04-2020 | 11:30 AM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். மன்னாரில் உள்ள காணி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.