மேலும் 3 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

மேலும் 3 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

by Staff Writer 16-04-2020 | 6:25 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான ​மேலும் மூவர் குணமடைந்துள்ளனர். இதற்கமைய, இன்று (16) குணமடைந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளதுடன் நாட்டில் இதுவரை 68 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில், புதிய கொரோனா நோயாளர்கள் எவரும் இன்று அடையாளம் காணப்படவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் 144 பேர் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனிடையே, மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 14,234 பேரில் 7,202 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துள்ளனர்.