கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரிப்பு

by Staff Writer 16-04-2020 | 7:01 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 238 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் நால்வர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மத்திய நிலையங்களில் இருந்தவர்கள் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அவர்களில் இருவர் யாழ். பலாலி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் கண்காணிக்கப்பட்டவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 2 அல்லது 3  மாதங்களுக்கு பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்