கிராண்ட்பாஸ் - நாகலகம் வீதி தனிமைப்படுத்தப்பட்டது

கிராண்ட்பாஸ் - நாகலகம் வீதி தனிமைப்படுத்தப்பட்டது

by Staff Writer 16-04-2020 | 2:39 PM
Colombo (News 1st) கொழும்பு - கிராண்ட்பாஸ், நாகலகம் வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று (16) காலை முதல் அமுலாகும் வகையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், கிராண்ட்பாஸ் - நாகலகம் வீதியைச் சேர்ந்த மக்கள் சமூக இடைவௌியை பேணுமாறு இராணுவத்தளபதி வலியுறுத்தியுள்ளார். நாட்டில் இதுவரை 238 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் அடையாளங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.