கடலில் சிக்கியிருந்த 382 ரோஹிங்யா அகதிகள் மீட்பு

இரண்டு மாதங்களாக கடலில் சிக்கியிருந்த ரோஹிங்யா அகதிகள் மீட்பு

by Staff Writer 16-04-2020 | 7:25 PM
Colombo (News 1st) கடலில் சிக்கித்தவித்த 382 ரோஹிங்யா அகதிகள் 2 மாதங்களின் பின்னர் பங்களாதேஷ் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் மலேசியாவிற்கு செல்லவிருந்த குறித்த படகில் பயணித்தவர்களில் சிலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக அவர்கள் பயணித்த படகு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்ட ரோஹிங்யா அகதிகள் மியன்மாரிலிருந்தா அல்லது பங்களாதேஷிலிருந்தா வருகைதந்தார்கள் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.