Covid-19 : டென்மார்க்கில் பாடசாலைகள் திறப்பு

Covid-19 : டென்மார்க்கில் பாடசாலைகள் திறப்பு

by Staff Writer 15-04-2020 | 4:10 PM
Colombo (News 1st) டென்மார்க்கில் சில பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. 11 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு பின்னர் பாடசாலைக்கு சென்றுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் முதல்தடவையாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த டென்மார்க்கில், தற்போது தொற்று பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா அச்சுறுத்தலின் பின்னர் பாடசாலைகளைத் திறந்த முதலாவது ஐரோப்பிய நாடாக டென்மார்க் பதிவாகியுள்ளது.