வௌிநாட்டு தொழிலாளர்களுக்கான நிவாரணத்திற்காக 8 M

வௌிநாட்டு தொழிலாளர்களுக்கான நிவாரணத்திற்காக 8 மில்லியன் ரூபா

by Staff Writer 15-04-2020 | 5:01 PM
Colombo (News 1st) வெளிநாடுகளிலுள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக மேலும் 8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்குமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தினேஷ் குணவர்தன, வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கிணங்க, 16 வௌிநாடுகளிலுள்ள தொழிலாளர் நலன்புரி பிரிவுகளுடன் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. அபுதாபி, பஹ்ரெய்ன், சைப்பிரஸ், துபாய், இஸ்ரேல், ஜோர்தான், குவைத் மற்றும் லெபனான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. மேலும் மலேசியா, ஓமான், மாலைதீவு, கத்தார், தென் கொரியா மற்றும் சிங்கப்பூரிலுள்ள வௌிநாட்டு தொழிலாளர்களும் இதனூடாக பயன் பெறவுள்ளனர். நாட்டில் நிலவும் சூழலுக்கு இணங்க சட்ட நடைமுறைகள் தொடர்பில் கருத்திற்கொள்ளாமல் உதவி வழங்கப்படவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.