ஊரடங்கு சட்டம் தொடர்பிலான புதிய அறிவித்தல்

ஊரடங்கு சட்டம் தொடர்பிலான புதிய அறிவித்தல்

by Staff Writer 15-04-2020 | 8:22 PM
Colombo (News 1st) கொழும்பு உள்ளிட்ட 6 மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (16) காலை 6 மணிக்குத் தளர்த்தப்படவுள்ளது. இதேவேளை, நாளை காலை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம், நாளை மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே, கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், கண்டி, புத்தளம் மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.