நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

by Staff Writer 14-04-2020 | 7:09 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்று (14) 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடுங் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.