அரச அச்சகத்தில் தீ

அரச அச்சகத்தில் தீ

by Staff Writer 14-04-2020 | 4:30 PM
Colombo (News 1st) பொரளையில் அமைந்துள்ள அரச அச்சகத்தில் தீ பரவியுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகேவிடம் வினவியபோது, அச்சகத்திலிருந்து அகற்றப்படும் ஆவணங்களை களஞ்சியப்படுத்தி வைக்கும் பகுதியிலேயே தீ ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.