சார்ஜன், கான்ஸ்டபள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

சார்ஜன் மற்றும் கான்ஸ்டபள் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

by Staff Writer 13-04-2020 | 6:27 PM
Colombo (News 1st) கொழும்பு நகர போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன் ஒருவரும் கான்ஸ்டபள் ஒருவரும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பொலிஸாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பிலேயே, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். மருதானை - டார்லி வீதியில் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரமின்றி வீதியில் பயணித்த நால்வருக்கு குறித்த இரண்டு பொலிஸாரும் தண்டனை வழங்கியுள்ளனர். தோப்புக்கரணம் போடுமாறு பொலிஸார் இருவரும் குறித்த நால்வருக்கும் உத்தரவிட்டுள்ளனர். கீழ்ப்படியாமை, களங்கம் ஏற்படும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த பொலிஸ் சார்ஜனுக்கும் பொலிஸ் கான்ஸ்டபளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.