கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 13-04-2020 | 4:08 PM
Update: 13/04/2020 ; 7.40 PM: மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, நாட்டில் மொத்தமாக 217 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  ----------------------------------------------------------------------------------------------------------------------------- Colombo (News 1st) 13/04/2020 ; 3.50 PM: நாட்டில் மேலும் 4 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புனானை தனிமைப்படுத்தல் முகாமிலிருந்தவர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது.