பல்கலைக்கழக செயற்பாடுகள் 3 கட்டங்களாக ஆரம்பம்

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் 3 கட்டங்களாக ஆரம்பம்

by Staff Writer 12-04-2020 | 5:00 PM
Colombo (News 1st) பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகளை 3 கட்டங்களாக ஆரம்பிப்பதற்கான திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (12) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயம் குறித்து தௌிவுபடுத்தியுள்ளார். பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மே மாதம் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக இதன்போது அவர் கூறியுள்ளார். இறுதியாண்டு மாணவர்களுக்காக எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதியும் அனைத்து மாணவர்களுக்காக மே மாதம் 18 ஆம் திகதியும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.