கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரிப்பு

Update: கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரிப்பு

by Staff Writer 12-04-2020 | 2:26 PM
Colombo (News 1st) 12/04/2020 : 10.35 PM: மேலும் 7 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளதாக  சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.    --------------------------------------------------------------------------------------------------------- நாட்டில் மேலும் 4 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 203 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, 141 பேர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.