அதிக கொரோனா மரணங்கள் அமெரிக்காவில் பதிவு

அதிக கொரோனா மரணங்கள் அமெரிக்காவில் பதிவு

by Chandrasekaram Chandravadani 12-04-2020 | 4:18 PM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸினால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது. ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைகழக தரவுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் தற்போது 20,000 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. ஏற்கனவே, ஒரே நாளில் 2,000 கொரோனா உயிரிழப்புகள் பதிவான முதலாவது நாடாகவும் அமெரிக்கா நேற்று பதிவானது. அமெரிக்காவில் ஐந்து இலட்சத்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், நியூயோர்க்கில் மாத்திரம் 180,000 இற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை சமூக இடைவௌியை பேணுமாறு அந்நாட்டு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களில் 16 மில்லியன் தொழில் வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளமையினால் அமெரிக்க பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளார். இதேவேளை, உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் ஏற்றத்தாழ்வுடன் பதிவாகி வருகின்றது.