Covid-19: பொலிஸ் அதிகாரிகளுக்கு பணப்பரிசு

Covid-19: பொலிஸ் அதிகாரிகளுக்கு பணப்பரிசு

by Staff Writer 11-04-2020 | 4:19 PM
Colombo (News 1st) பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் அதற்கு கீழுள்ள பதவிகளில் உள்ளவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தனது கடமையில் விடாமுயற்சியுடனும் உறுதியுடனும் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, கடந்த மார்ச் 11 முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், உயிராபத்தைக் கூட கருத்திற் கொள்ளாமல் கொரோனா வைரஸ் ஒழிப்புப்பணியில் ஈடுபட்ட, குறித்த பதவிகளில் உள்ள ஒவ்வொரு அதிகாரிக்கும் 5,000 ரூபா வெகுமதியை வழங்க, பொலிஸ் மா அதிபரினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இத் தொகையினை வழங்குவதற்கு, மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.